Saturday, September 26, 2009

கடிதம்


ஒரு முறைக்கு பல முறையாய்
படித்துப்பார்க்க ....
புத்தகங்களுக்குள் வைத்து
கல்லூரிக்கு எடுத்துச்செல்ல ....
வீடு மாற்றும் போதேல்லாம்
பத்திரமாய் பாதுகாக்க ...
செல்லரித்துப்போன இடங்களில்
சொல் நிரப்பி காப்பாற்ற ....
கையெழுத்தின் அழகில்
சில நேரம் மயங்கிக்கிடக்க ....
எழுத்துப்பிழையான இடங்களை
சுட்டிக்காட்ட ....
எழுதிய தேதியில் இருந்து
இன்றைய தேதி வரை கணக்கிட ....
படித்துக்கொண்டிருக்கும் வேளையில்
யாராவது வந்துவிட்டால்
பதற்றமடைந்து மறைத்து வைக்க ...
ஒவ்வொரு எழுத்தின் இடைவெளியிலும்
உன் முகம் பார்த்து ரசிக்க .....
இதுவரை என்னிடம் இல்லை ...
நீ எழுதியதாய் ஒரு கடிதம் கூட .....!

Friday, August 28, 2009

பிரிவை எண்ணி வலிக்கவில்லை மனது

நடைபாதையில் தனியாக நடந்து செல்கையில்
திடீர் என்று உன் முகம் நினைவில் வரும்
அப்போது........

சந்தோசமாக தோழிகளுடனான அரட்டையில்
காதல் என்ற வார்த்தை இடம்பெறும்
அப்போது.......

என்றோ நாம் ரசித்த பாடல்
நான் ஏறும் பேருந்தில் ஒலிக்கும்
அப்போது.......

காணாமல் போன துப்பட்டாவை தேடுகையில்
உன் கைக்குட்டை கண்ணில்படும்
அப்போது........

உன் சாயலில் எவரேனும் என்னை கடந்தால்
நீதானா என பார்க்க ஆவல் எழும்
அப்போது........

இப்படி சிதறித்தான் போகிறேன்
அப்போதல்லாம்
"மறக்கிறேன் " என்று சொல்லி சொல்லி
உன் நினைவுகளை பத்திரப்படுத்தி
கொண்டு.....................

வாழ்கை

கருவறைக்கும் ,கல்லறைக்கும்
இடையில் -எத்தனை
சிலுவை மரங்கள் ,

பணம்

அதிக பணத்தை தேடும் மனிதனிடம் ,
பணம் ஏன் என்றேன் !
சுகத்திற்காக என்றான் ,ஆனால்
சுகத்தை விட்டுவிட்டு
அல்லவா பணம் தேடுகிறான் !!!

மனித நேயம்

பாடையில் போகிறான் வறுமைக் கோட்டில்
இறந்தவன்,வாய்க்கரிசி போட்டனர்
வந்தவர்கள் ,அவன் பிழைத்திருப்பான்
வாய்க்கு அரிசி அன்றைக்கே போட்டுருந்தால்!!!

Thursday, August 27, 2009

காதல் கதை

குவளை பூ போன்ற கண்கள் கொண்ட குறிஞ்சி பூ அவள் ,
அவள் முகம் தாமரை பூ , உடல் வாழை பூ ,
குணம் ரோஜா பூ ,
என் நெஞ்சில் பூத்தது காதல் பூ ,
இரவு பகல் பாராது பூத்தது கனவு பூ ,
என் இதயா பூவை அந்த இளமை பூவிடம்
தூதுபோக கிடைத்ததொரு தெருவில் பூ விற்கும் தாவணி பூ , தாவணி பூ
என் காதல் பூவை அந்த கன்னி பூவிடம் சேர்த்தது,
கன்னி பூவும் பதிலுக்கு ஒரு கடித பூ
அனுப்பியது,நான் ஏற்கனவே பூஜைக்கு
நிஜையீக பட்ட பூ என்ற பதில் பூவோடு இருந்தது பத்திரிக்கை பூ,
திருமண பூ பந்தலுக்கு போகாத
அரளி பூவாய் எட்ட நின்று அட்சதை பூ மட்டும்
தூவி விட்டு உதிரிந்து விழுந்தது
என்ன அசை பூ!!

வலி

நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள்
சொல்ல வார்த்தைகள் தேடி அலைகிறேன் !
உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது!
குழந்தையை சுமக்கின்ற அன்னைபோல்
எண்ணங்களை என் உள்ளத்தில் சுமக்கிறேன் !
குழந்தையை பிரசவிக்கும் வேளை வழியானது !
"ஒன்றாக கலந்த சுவாசம்
தனியாகிறது ! வலிக்கத்தான் செய்யும் "
ஆனால் எண்ணங்களை -நான்
பிரசவிக்காமலேயே வலியோடு இருக்கிறேன் !

மழை

மழை உலகின் நன்மைக்காக
உயரத்தில் இருந்து குதித்து
தற்கொலை செய்துகொள்ளும்
தன்னலமற்ற தனிபிறவிகள் !!!!