Friday, August 28, 2009

பிரிவை எண்ணி வலிக்கவில்லை மனது

நடைபாதையில் தனியாக நடந்து செல்கையில்
திடீர் என்று உன் முகம் நினைவில் வரும்
அப்போது........

சந்தோசமாக தோழிகளுடனான அரட்டையில்
காதல் என்ற வார்த்தை இடம்பெறும்
அப்போது.......

என்றோ நாம் ரசித்த பாடல்
நான் ஏறும் பேருந்தில் ஒலிக்கும்
அப்போது.......

காணாமல் போன துப்பட்டாவை தேடுகையில்
உன் கைக்குட்டை கண்ணில்படும்
அப்போது........

உன் சாயலில் எவரேனும் என்னை கடந்தால்
நீதானா என பார்க்க ஆவல் எழும்
அப்போது........

இப்படி சிதறித்தான் போகிறேன்
அப்போதல்லாம்
"மறக்கிறேன் " என்று சொல்லி சொல்லி
உன் நினைவுகளை பத்திரப்படுத்தி
கொண்டு.....................

No comments:

Post a Comment