Tuesday, March 26, 2013

நீ வருவாய் என !!!




உன் அழகை நான் உணர்ந்த
தருணம் அது!
களவாடி போன என்  கண்களிடம்
கைதாகிப் போன உன்  கண்களே!
நாளெல்லாம் பேசி விடுகிறேன்
உன்னிடம் ......ஆனால்
நட்பிலிருந்து காதலுக்கு
மாற்றியதை
சொல்ல தவறிவிட்டேன்!
கற்பனையில் என்னை கடத்திச் செல்லும்
உன்  மீதான காதல்
ததும்பியபடி நிற்கும்
என் கண்களில்!
எனக்குள்ளே பதில் ஒன்றை எழுதிக் கொண்டு
உன்னிடம்  எழுப்பும் வினா.. அதில்
மிஞ்சி நிற்பது என்னவோ
ஏக்கமும் ஏமாற்றமும்!
அறிமுகம் ஆன பின்பும்
அறிமுகம் ஆகாமல் கிடக்கும்
அகம்...,(நம் குடும்பம் )
அதிலே மீண்டும் வேண்டும்
ஒரு நேர் கானல்!
தொடர்ச்சியாய் நிகழ்த்தும்
நித்தமொரு போராட்டம்..(நம் குடும்பத்தில் )
அதில் உனக்காக காத்து கிடப்பதும்
ஒரு சுகம் !
ஏனோ பயப்படுவதை
காட்டிக் கொள்ளும் என் இதயம்
எதிர் பாராமல் எல்லை தாண்டிவிட்டது உன்
கற்பனையில்...,
ஏக்கமென்று ஒன்றென
உண்டெனில் என்றாவது
ஏங்கியே செத்து விடும்
உன்னை போல..,
மீண்டும் ஒரு ஜென்மம்
எனக்கு   வேண்டுமென்று!
நித்தம் உன் நினைவுகளையும்,
எதிர்கால நடப்புகளையும்,
எதிர்கொள்ளும்  வலிமையுடன்
காத்துஇருக்கிறேன் ........
உனக்காக அல்ல உன்னால்  முடிமா 
 என்ற உன் கேள்விக்காக......

No comments:

Post a Comment